குறள்

குற்றங்கடிதல்
குறள் # 431
செருக்கும் சினமும் சிறுமையும் இல்லார்
பெருக்கம் பெருமித நீர்த்து
குறள் # 432
இவறலும் மாண்புஇறந்த மானமும் மாணா
உவகையும் ஏதம் இறைக்கு
குறள் # 433
தினைத்துணையாம் குற்றம் வரினும் பனைத்துணையாக்
கொள்வர் பழிநாணு வார்
குறள் # 434
குற்றமே காக்க பொருளாக; குற்றமே
அற்றம் தரூஉம் பகை
குறள் # 435
வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தாறு போலக் கெடும்
குறள் # 436
தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றம் காண்பிற்பின்
என்குற்ற மாகும் இறைக்கு?
குறள் # 437
செயற்பால செய்யாது இவறியான் செல்வம்
உயற்பாலது அன்றிக் கெடும்
குறள் # 438
பற்றுள்ளம் என்னும் இவறன்மை எற்றுள்ளும்
எண்ணப் படுவதொன்று அன்று
குறள் # 439
வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க
நன்றி பயவா வினை
குறள் # 440
காதல காதல் அறியாமை உய்க்கிற்பின்
ஏதில் ஏதிலார் நூல்