முகப்பு

ஓங்காரவள்ளுவம்

ஹரிஓம். வணக்கம். ஓங்காரவள்ளுவம் என்ற இந்த வலைத்தளம், பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அனுக்ரஹத்தால் தொடங்கப்பட்டது. இதில் ஸ்வாமீஜி அவர்கள், திருவள்ளுவரை பற்றியும், திருக்குறள்களுக்கு கூறிய உரையும் எழுத்து வடிவிலும், ஒலி வடிவிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஸ்வாமீஜி அவர்கள் சனாதன தர்மம் பற்றியும், மனித வாழ்க்கையின் குறிக்கோள் பற்றியும் மற்ற பிற உரைகள் பற்றி கூறும்பொழுது திருக்குறளில் இருந்து அநேக எடுத்துக்காட்டு காண்பிப்பார். இது போன்ற திருக்குறள் எடுத்துக்காட்டுகளை வார்த்தைகள் மூலம் சுலபமாக இந்த வலைத்தளத்தில் தேடி அறியலாம். மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொது மக்கள் இதைப் பயன்படுத்தி திருக்குறளைப் பற்றி நன்கு அறிந்து அதை அவர் அவர்தம் வாழ்க்கையில் உபயோகப்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

குறிப்பிட்ட அதிகாரம் மற்றும் குறளின் விளக்கம் அறிய அதிகாரம்
மற்றும் குறள் எண்ணை தேர்ந்தெடுக்கவும்
இன்றைய வார்த்தை
மலர்மிசை ஏகினான்
உள்ளத் தாமரையில் உணர்வாக வீற்றிருப்பவன்
உங்களுக்குத் தெரியுமா?
வேதங்களில் கடவுளுக்கு அடுத்தபடியாக மழை (நீர்) போற்றப்படுகிறது. திருவள்ளுவரும் வேதமரபுப்படி, கடவுள் வாழ்த்திற்கு அடுத்து, வான்சிறப்பைக் கூறுகிறார்.