புகழ்
குறள் # 231
ஈதல்; இசைபட வாழ்தல்; அதுஅல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு
குறள் # 232
உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்குஒன்று ஈவார்மேல் நிற்கும் புகழ்
குறள் # 233
ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால் பொன்றாது நிற்பதுஒன்று இல்
குறள் # 234
நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப் போற்றாது புத்தேள் உலகு
குறள் # 235
நத்தம்போல் கேடும் உளதுஆகும் சாக்காடும் வித்தகர்க்கு அல்லால் அரிது
குறள் # 236
தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று
குறள் # 237
புகழ்பட வாழாதார் தம்நோவார் தம்மை இகழ்வாரை நோவது எவன்?
குறள் # 238
வசைஎன்ப வையத்தார்க்கு எல்லாம் இசைஎன்னும் எச்சம் பெறாஅ விடின்
குறள் # 239
வசைஇலா வண்பயன் குன்றும் இசைஇலா யாக்கை பொறுத்த நிலம்
குறள் # 240
வசைஒழிய வாழ்வாரே வாழ்வார் இசைஒழிய வாழ்வாரே வாழா தவர்

