ஒப்புரவு அறிதல்
குறள் # 211
கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு என்ஆற்றும் கொல்லோ உலகு
குறள் # 212
தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு வேளாண்மை செய்தற் பொருட்டு
குறள் # 213
புத்தேள் உலகத்தும் ஈண்டும் பெறல்அரிதே ஒப்புரவின் நல்ல பிற
குறள் # 214
ஒத்தது அறிவான் உயிர்வாழ்வான் மற்றையான் செத்தாருள் வைக்கப் படும்
குறள் # 215
ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு
குறள் # 216
பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம் நயன்உடை யான்கண் படின்
குறள் # 217
மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம் பெருந்தகை யான்கண் படின்
குறள் # 218
இடன்இல் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார் கடன்அறி காட்சி யவர்
குறள் # 219
நயன்உடையான் நல்கூர்ந்தான் ஆதல் செயும்நீர செய்யாது அமைகலா வாறு
குறள் # 220
ஒப்புரவி னால்வரும் கேடுஎனின் அஃதொருவன் விற்றுக்கோள் தக்கது உடைத்து

