கள்ளாமை
குறள் # 281
எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்தொன்றும் கள்ளாமை காக்கதன் நெஞ்சு
குறள் # 282
உள்ளத்தால் உள்ளலும் தீதே; பிறன்பொருளைக் கள்ளத்தால் கள்வேம் எனல்
குறள் # 283
களவினால் ஆகிய ஆக்கம் அளவுஇறந்து ஆவது போலக் கெடும்
குறள் # 284
களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண் வீயா விழுமம் தரும்
குறள் # 285
அருள்கருதி அன்புடையர் ஆதல் பொருள்கருதிப் பொச்சாப்புப் பார்ப்பார்கண் இல்
குறள் # 286
அளவின்கண் நின்றொழுகல் ஆற்றார் களவின்கண் கன்றிய காத லவர்
குறள் # 287
களவுஎன்னும் காரறி வாண்மை அளவுஎன்னும் ஆற்றல் புரிந்தார்கண் இல்
குறள் # 288
அளவுஅறிந்தார் நெஞ்சத்து அறம்போல நிற்கும் களவுஅறிந்தார் நெஞ்சில் கரவு
குறள் # 289
அளவல்ல செய்தாங்கே வீவர் களவல்ல மற்றைய தேற்றா தவர்
குறள் # 290
கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை கள்ளார்க்குத் தள்ளாது புத்தே ளுலகு

