உழவு
குறள் # 1031
சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம்; அதனால் உழந்தும் உழவே தலை
குறள் # 1032
உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃது ஆற்றாது எழுவாரை எல்லாம் பொறுத்து
குறள் # 1033
உழுதுஉண்டு வாழ்வாரே வாழ்வார்மற்று எல்லாம் தொழுதுஉண்டு பின்செல் பவர்
குறள் # 1034
பலௌடை நீழலும் தம்குடைக்கீழ்க் காண்பர் அலகுஉடை நீழ லவர்
குறள் # 1035
இரவார் இரப்பார்க்குஒன்று ஈவர் கரவாது கைசெய்துஊண் மாலை யவர்
குறள் # 1036
உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம் விட்டோம்என் பார்க்கும் நிலை
குறள் # 1037
தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்துஎருவும் வேண்டாது சாலப் படும்
குறள் # 1038
ஏரினும் நன்றால் எருஇடுதல்; கட்டபின் நீரினும் நன்றுஅதன் காப்பு
குறள் # 1039
செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந்து இல்லாளின் ஊடி விடும்
குறள் # 1040
இலம்என்று அசைஇ இருப்பாரைக் காணின் நிலம்என்னும் நல்லாள் நகும்

