குறள்
கோளில் பொறியில் குணம்இலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை
குறள் விளக்கம்
பொறிவாயில்களில் (இந்திரிய கோளகங்களில்) ஆற்றல் இல்லையென்றால் (கோளகங்கள் பயனற்றது போல) எட்டு குணங்களை சிறப்பாக உடைய (இறைவனுடைய) திருவடிகளை (பணிந்து) வணங்காத தலை (முதலான உடல் உறுப்புகள்) இருந்தும் பயன் இல்லாதது.