Kural

திருக்குறள் #651
குறள்
துணைநலம் ஆக்கம் தரூஉம் வினைநலம்
வேண்டிய எல்லாம் தரும்
குறள் விளக்கம்
ஒருவனுக்குத் துணைபுரிபவர்கள் நல்லவர்களாக இருந்தால் அது அவனுக்குச் செல்வச் சிறப்பை மட்டும் கொடுக்கும். ஆனால் செய்யும் செயல் நல்லனவாக இருந்தால், அது அவன்விரும்பிய இம்மை மற்றும் மறுமைப் பயன் எல்லாவற்றையும் கொடுக்கும்.