குறள்
அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்
தவ்வையைக் காட்டி விடும்
குறள் விளக்கம்
பிறருடைய செல்வம் முதலான சிறப்பினைக் கண்டு பொறாமை கொள்பவனை, திருமகள் அவனது பொறாமைக் குணத்தைப் பொறுக்க முடியாமல் தனது தமக்கையாகிய மூதேவியை அவனிடத்தில் இருக்கும்படி செய்துவிட்டு (அவனை விட்டு) நீங்கிவிடுவாள்.