குறள்
இணர்ஊழ்த்தும் நாறா மலர்அனையர் கற்றது
உணர விரித்துஉரையா தார்
குறள் விளக்கம்
தாம் கற்று அறிந்த விஷயத்தை மற்றவர்கள் புரிந்து கொள்ளும் வண்ணம் தெளிவாக விரிவாக எடுத்து விளக்க இயலாதவர்கள் கொத்துக் கொத்தாகப் பூத்திருக்கும் வாசனை இல்லாத மலர்களைப் போன்றவர்கள்.