குறள்
அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க
இகல்வேந்தர்ச் சேர்ந்துஒழுகு வார்
குறள் விளக்கம்
தனக்கு மாற்பட்ட கருத்துடையோரிடம் கோபம் கொள்ளும் அரசருக்கு அருகில் பணி செய்வோர் அவ்வரசரை மிக நீங்காமலும் மிக நெருங்காமலும் இருந்து நெருப்பில் குளிர் காய்கின்றவர் போல அளவான தூரத்தில் இருக்க வேண்டும்.