குறள்
நாள்என ஒன்றுபோல் காட்டி உயிர்ஈரும்
வாள்அது உணர்வார்ப் பெறின்
குறள் விளக்கம்
உடலின் இயல்பை ஆழ்ந்து சிந்தித்து உணரப் பெறுவோமானால் உயிர் வாழும் உடல், நாள் என்று அளக்கப்படும் ஒரு கால அளவு போல தன்னைக் காண்பித்து, அறுக்கும் வாளின் வாயில் உள்ளது என்று தெளிவாய் விளங்கும்.